News December 15, 2024
இங்கெல்லாம் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் நாளை மயிலாடுதுறை, திருவாரூர், நாகைப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் நள்ளிரவு கனமழை பெய்யும் பட்சத்தில், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இம்மாவட்டங்களில் வரும் 17ஆம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2026
+2 மாணவி வன்கொடுமை: இளைஞர் அதிரடி கைது

தூத்துக்குடி, விளாத்திகுளத்தில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கூறி 30 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சாயல்குடியை சேர்ந்த முனீஸ்வரனை செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் பிடித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளியை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி மாணவியின் உறவினர்கள் 9 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
News March 19, 2026
‘ஆதவ் அர்ஜுனாவை உடனே நீக்குக’

தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியிலும் ஆதவ் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்துவதாக LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சாடியுள்ளார். விஷக்கிருமி போன்ற ஆதவ் அர்ஜுனா எந்த கட்சிக்கு சென்றாலும், அக்கட்சியின் தலைவரை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை அடைய நினைப்பார். எனவே, ஆதவ் அர்ஜுனா போன்ற புற்றுநோய் செல்களை உடனே நீக்க வேண்டும் என்று விஜய்க்கு மறைமுகமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
News March 19, 2026
‘அனிமேஷன்’ லெஜெண்ட் காலமானார்!

உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவர்ந்த ‘Anime’ கார்டூன் உலகின் லெஜெண்ட் சுடோமு ஷிபயாமா(84) காலமானார். நுரையீரல் புற்றுநோயுடன் நீண்ட காலம் போராடி வந்த அவர், மார்ச் 6-ம் தேதி உயிரிழந்ததாக ஜப்பானிய அனிமேஷன் நிறுவனமான ’Asia-Do’ அறிவித்துள்ளது. இவர் 1980-2004 வரையிலான காலகட்டத்தில், ‘டோரிமோன்’ மட்டுமின்றி குழந்தைகளுக்கான பல்வேறு அனிமேஷன் தொடர்களையும் இவர் இயக்கியுள்ளார். RIP


