News December 15, 2024

குழந்தைகளை தவிக்க விட்டு பெற்றோர் தற்கொலை

image

சிதம்பரம் அருகே 2 பெண் குழந்தைகளை நிர்கதியாக தவிக்க விட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவரிடம் ​வீடியோ காலில் பேசி விட்டு, மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவி மறைவை அறிந்த கணவனும் சிங்கப்பூரிலேயே தற்கொலை செய்துகொண்டார். இருவரும் தொடர்ந்து சண்டையிட்டு வந்த நிலையில், உயிரை மாய்த்துக் கொண்டனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

Similar News

News March 8, 2026

தமிழக தேர்தல்: ECI வெளியிட்ட புதிய அறிவிப்பு!

image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி வரும் 15 (அ) 16-ம் தேதிகளில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், ECI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ₹40 லட்சத்துக்கும் மேல் செலவழித்தால், ஊழலாக கருதப்படும் என்று ECI எச்சரித்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

News March 8, 2026

USA, இஸ்ரேலுக்கு புதிய செக்

image

பிப்.28-ம் தேதி இஸ்ரேல், USA நடத்திய தாக்குதலில் ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியில் <<19292495>>165 மாணவிகள்<<>> பலியாகினர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இத்தாக்குதலை போர் குற்றமாக கருதி விசாரிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை வைத்துள்ளது. அத்துடன் 165 மாணவிகள் பலியான இத்தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

News March 8, 2026

CPM-ம், பாஜகவும் ஒரே கட்சிதான்: ராகுல் காந்தி

image

கேரளாவில் CPM மற்றும் BJP என்பது தனித்தனி கட்சிகள் அல்ல. CJP என்ற ஒரே கட்சியாக அவை செயல்படுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸை வீழ்த்துவதே CJP கட்சியின் முக்கிய நோக்கம் என்ற அவர், CPM விவசாயிகள், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவில்லை என பேசியுள்ளார். மேலும், ட்ரம்பின் கட்டுப்பாட்டில் மோடி இருப்பதைப் போலவே, மோடியின் கட்டுப்பாட்டில் பினராயி விஜயன் உள்ளார் எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!