News December 15, 2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS

image

அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு நற்செய்தி அளிக்க உள்ளதாகத் தெரிகிறது. ஆண்டுக்கு இரண்டுமுறை அகவிலைப்படி (Dearness Allowance) உயர்த்தப்படுவது வழக்கம். 2024 தீபாவளி பரிசாக DAவை 3% மத்திய அரசு உயர்த்தியது. தொடர்ந்து, 2025ல் மேலும் 3% DAவை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, DA 53%ல் இருந்து 56%ஆக உயர உள்ளது. 2025 மார்ச் மாதம் இந்த அகவிலைப்படி உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.

Similar News

News March 17, 2026

நயன்தாரா சர்ச்சை: நடிகர் சங்கம் கண்டனம்!

image

நடிகைகளை தரக்குறைவாக பேசுவது நாகரிகமான அரசியல் ஆகாது என தென்னிந்திய நடிகர் சங்கம் <<19406314>>சிவி சண்முகத்துக்கு<<>> கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், அரசியல் மேடைகளில் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க பெண்களையும், நடிகைகளையும் அநாகரிகமாகச் சித்தரிப்பதுதான் உங்கள் கொள்கையா எனவும் கடுமையாக விமர்சித்துள்ளது. முன்னதாக, தனது கருத்துக்கு சிவி சண்முகம் வருத்தம் தெரிவித்திருந்தார்.

News March 17, 2026

‘தவறு செய்துவிட்டேன்’.. ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டார்

image

முந்தைய அதிமுக ஆட்சியில் EPS-க்கு ஆதரவளித்ததற்கு OPS மன்னிப்பு கேட்டுள்ளார். நெல்லை திமுக கூட்டத்தில் பேசிய அவர், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் EPS-க்கு தான் ஆதரவளித்தது மிகப்பெரிய தவறு என்றும், அவருக்கு எதிராக வாக்களித்திருந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார். தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

News March 17, 2026

செந்தில் பாலாஜியிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

image

டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணை முடிவடைந்தது. 6 மணி நேர விசாரணையில், கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என தவெகவினர் வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. குறிப்பாக, விஜய் பரப்புரையின் நடுவே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது தொடர்பாகவும், மக்கள் பாதிக்கபட்டது குறித்து எப்போது தகவல் கிடைத்தது; எப்போது ஹாஸ்பிடல் சென்றார் என்பது தொடர்பாகவும் கேட்கப்பட்டது.

error: Content is protected !!