News December 15, 2024

நாமக்கல்: தீப்பிடித்து புதுமண தம்பதி படுகாயம்

image

பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (28), இவரது மனைவி துர்கா (20). இருவரும் புதுமண தம்பதிகள். நேற்று காலை சுரேஷ் வெந்நீர் போட சமையல் கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது கியாஸ் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதன் காரணமாக திடீரென சுரேஷ் மீது தீப்பற்றி எரிந்தது. தடுக்க வந்த அவரது மனைவி துர்கா மீதும் தீப்பற்றியது. அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர்.

Similar News

News March 5, 2026

நாமக்கல்: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

நாமக்கல் மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க

News March 5, 2026

புதிய பேருந்து சேவை துவக்கம் – முதல்வருக்கு எம்.பி. நன்றி!

image

நாமக்கல் மக்களின் கோரிக்கையை ஏற்று கொண்டப்பநாயக்கன்பட்டி, படத்தையான்குட்டை, லத்துவாடி, அணியாபுரம் மற்றும் மோகனூர் – கோவைக்கு புதிய பேருந்துகள். மேலும் வேலகவுண்டம்பட்டி மற்றும் வரதராஜபுரம் வரை வழித்தடங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. இதற்காக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சருக்கு கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி., மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

News March 5, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (04.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!