News December 15, 2024
அரசுப் பேருந்து மோதியதில் 2 கார்கள் சேதம்

விழுப்புரத்தில் இருந்து செங்கல்பட்டில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு, அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் பகுதியில் உள்ள சிக்னல் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னாள் நின்று கொண்டிருந்த 2 கார்கள் மற்றும் 1 பைக் மீது பலமாக மோதியது. இதில், கார்கள் 2 சேதமடைந்தன. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 1, 2025
செங்கல்பட்டில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

செங்கல்பட்டு மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News October 1, 2025
செங்கல்பட்டு: GST குறைக்கவில்லையா? ஒரு CALL

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண் தொடர்பு கொண்டு (அ) இந்த<
News October 1, 2025
பெரும்பாக்கம்: லாரி மோதியதில் உணவு டெலிவரி ஊழியர் பலி

பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் சகாயராஜ் (40). இவர் நேற்று முன்தினம் இரவு உணவு டெலிவரி செய்ய சென்றபோது பெரும்பாக்கம் சர்ச் அருகில் சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளிக்கரணை போலீசார், லாரி டிரைவர் சீனு (30) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.