News March 23, 2024
சென்னையில் மர்ம பொருள் வெடிப்பு: பீதியில் மக்கள்

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஆதித்ய பிரணவ் என்ற பிளஸ் டூ மாணவர் நேற்று முன்தினம் வேதிப்பொருள்களை பயன்படுத்திய போது வெடி விபத்து ஏற்ப்பட்டது. இதில் அந்த மாணவர் உயிரிழந்தார். இந்நிலையில் மீண்டும் அதே வீட்டில் மர்மப் பொருள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு தீயணைப்பு வாகனமும் கொண்டுவரப்பட்டுள்ளது.
Similar News
News October 26, 2025
சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ்!

சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி, தொழில்வரி ஆகியவை பிரதான வருவாயாக உள்ளது. இதன் காரணமாக அக்.31 ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்திட வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பவும், மேலும் ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
News October 26, 2025
சென்னை: மாரத்தனை துவக்கி வைத்த DCM

சென்னை நேப்பியர் பாலம் அருகே இன்று (அக்.26), இந்திய மருத்துவ சங்கத்தின் கோடம்பாக்கம் கிளை சார்பில் எலும்பு அடர்த்தி குறைவதால் ஏற்படும் எலும்பு பலவீனம், இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் பக்கவாதம், உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் நடைபெற்றது. இதனை DCM உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
News October 26, 2025
சென்னை: 10th படித்தவரா நீங்கள்?-DON’T MISS IT!

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிகளில் காலியாக உள்ள 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள் இங்கு <


