News December 14, 2024
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி தர நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை சரி செய்ய நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆவணங்கள், வீடுமனை பட்டா வழங்கி, மாற்று இடங்களில் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 255 மருத்துவ முகாமில் 17,000 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு, கால்நடைகளுக்கும் 13 முகாமில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
Similar News
News August 23, 2025
கிருஷ்ணகிரி விமான நிலையம் குறித்து புதிய UPDATE!

தமிழ்நாடு அரசு பேரிகை–பாகலூர் அருகே விமான நிலையம் அமைப்பதற்கான, இடத்தை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓசூரிலுருந்து பேரிகை 25 KM, பாகலூர் 12 KM தொலைவில் உள்ளது. அத்திப்பள்ளியில் இருந்து 19 KM தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் எவ்வளவு நிலம் தேவை என்பதற்கான ஆய்வு நடைபெறுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News August 23, 2025
கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (ஆக.22) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, இழப்பீட்டு மானியத் தொகையை வரும் 15 நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
News August 23, 2025
கிருஷ்ணகிரியில் நாளை மரபுச் சந்தை

கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் 181-வது மரபுச் சந்தை, நாளை (ஆக.24) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூலக மைதானத்தில் நடைபெற உள்ளது. இச்சந்தையில் பாரம்பரிய அரிசி வகைகள், பசு நெய், தேன், ஊறுகாய், தின்பண்டங்கள் மற்றும் ரசாயனமில்லா காய்கறிகள் உள்ளிட்டவை கிடைக்கும். இந்த வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்