News March 23, 2024

பழனி: 20 டன் வாழைப்பழம்

image

பழனி பங்குனி உத்திர திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை வாங்குகின்றனர். ஆடலூர், பன்றி மலை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களிலிருந்து 20 டன் மலை வாழைப்பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் மலை வாழைப்பழங்களை வாங்கி செல்கின்றனர். ஒரு பழம் 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News April 19, 2025

திண்டுக்கல் பேருராட்சி எண்கள்

image

▶️செயல் அலுவலர், அய்யம்பாளையம் பேரூராட்சி: 7824058251
▶️செயல் அலுவலர், வத்தலகுண்டு பேரூராட்சி: 7824058253
▶️செயல் அலுவலர், சின்னாளப்பட்டி பேரூராட்சி: 7824058254
▶️செயல் அலுவலர், எரியோடு பேரூராட்சி: 7824058255
▶️செயல் அலுவலர், நத்தம் பேரூராட்சி:7824058258
▶️செயல் அலுவலர், நிலக்கோட்டை பேரூராட்சி: 7824058260
▶️செயல் அலுவலர், பாளையம் பேரூராட்சி: 7824058261
SHARE பண்ணுங்க!

News April 19, 2025

ரூ.88 லட்சம் மோசடி செய்த எம்.பி.ஏ இளைஞர்!

image

திண்டுக்கல்: ஒரு பெண்ணுக்கு அரசு பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.88 லட்சம் மோசடி செய்த வத்தலக்குண்டைச் சேர்ந்த பட்டதாரி வாலிபரை போலீசார் நேற்று(ஏப்.18) கைது செய்தனர். இதுகுறித்த விசாரணையில் அவர் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து விட்டு வேலை தேடி வந்ததாகவும், அந்த நேரத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து, தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 18, 2025

களவு பொருளை கை சேர்க்கும் கருப்பர்

image

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பிரசித்தி பெற்ற வண்டிக் கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கருப்பணசாமி வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் களவு போன பொருள் மீண்டும் கிடைக்கும், நினைத்த காரியம் கைகூடும், பில்லி சூனியம் அகலும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!