News December 14, 2024
எங்கும் தலைமறைவாகவில்லை: மோகன் பாபு

தான் தலைமறைவாகி விட்டதாக வெளியான செய்தியை மோகன் பாபு முற்றிலுமாக மறுத்துள்ளார். ‘என்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. நீதிமன்றம் முன்ஜாமின் மறுக்கவில்லை. தற்போது வீட்டில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளேன். உண்மைகளை வெளிக்காட்டுமாறு மீடியாக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்று Xல் பதிவிட்டுள்ளார். செய்தியாளரை மோகன் பாபு தாக்கிய விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 7, 2026
விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை: அண்ணாமலை

மோடி தலைமையிலான 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எரிவாயு பயன்பாடு 45% அதிகரித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, சமையல் எரிவாயு இறக்குமதியும் அதிகரித்திருக்கிறது. மொத்த பயன்பாட்டில், இறக்குமதி மட்டுமே 60% ஆக உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்படும்போது, நமது நாட்டிலும் விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
News March 7, 2026
FLASH: விஜய் மனைவி சங்கீதா வேதனை!

செங்கல்பட்டு கோர்ட்டில் <<19319427>>சங்கீதா தாக்கல்<<>> செய்துள்ள புதிய மனுவில் பல்வேறு தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார். 26 வருடங்கள் விஜய் உடன் குடும்பம் நடத்தி 2 குழந்தைகளை பெற்று வளர்த்துள்ளதாகவும், நல்ல குடும்ப தலைவியாக இருந்ததாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்த விஜய், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
News March 7, 2026
யாரை பற்றி பதிவிட்டிருக்கிறார் கிருத்திகா உதயநிதி?

ஒரு செலிபிரிட்டி எப்போது பிரச்னையில் சிக்குகிறார் என்பதை பற்றி கிருத்திகா உதயநிதி பதிவிட்டுள்ளார். மக்கள் தன்னை எப்படி பார்க்கிறார்களோ அதுதான் நான் என நினைக்க தொடங்கி, எப்போது ஒரு செலிபிரிட்டி தன்னுடைய சுயத்தை கைவிடுகிறாரோ அப்போது அவர் பிரச்னையில் சிக்குகிறார் என்று அர்த்தம் என பதிவிட்டுள்ளார். இதனால் யாரை பற்றி கிருத்திகா சொல்லவருகிறார் என X தளத்தில் விவாதம் கிளம்பியுள்ளது.


