News December 14, 2024
இளங்கோவன் மறைவுக்கு ராகுல், கார்கே இரங்கல்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், அச்சம் அறியா, கொள்கையில் உறுதி கொண்ட தலைவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். தந்தை பெரியாரின் கொள்கையில் உறுதியாக இருந்ததாகவும், தமிழகத்திற்கான அவரது அர்ப்பணிப்பு என்றென்றும் உத்வேமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அதேபோல, நேர்மையான, தைரியமான தலைவர் என மல்லிகார்ஜுன கார்கே புகழாரம் சூட்டியுள்ளார்.
Similar News
News April 6, 2026
CSK தோல்விக்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்

கடந்த IPL சீசன் தனக்கு ஏமாற்றம், வலி மிகுந்ததாக இருந்ததாக அஸ்வின் பேசியுள்ளார். தன்னை விடுவிப்பதா, தக்க வைப்பதா என்ற தலைவலியை நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டாம் என்பதற்காகவே தானாக முன்வந்து ரிட்டயர் ஆனதாகவும் கூறியுள்ளார். இதனால், அணிக்கு ₹10 கோடி மிச்சமானதாக குறிப்பிட்ட அவர், நடப்பு சீசனில் CSK-வின் தோல்விக்கு, ஃபாஸ்ட் பவுலர்களை சரியாக பயன்படுத்தாததே காரணம் என தெரிவித்துள்ளார்.
News April 6, 2026
நடிகை த்ரிஷா திடீர் முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சிவரும் த்ரிஷா நடிப்பை கைவிட முடிவு செய்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணன் பேசியுள்ளார். த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவதை தன்னிடம் சில தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். த்ரிஷாவின் திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
News April 6, 2026
கொத்தனாராக மாறிய ஆதவ்.. வாக்கு சேகரிப்பில் தீவிரம்

சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு சேகரிக்க ஒவ்வொரு வேட்பாளரும் புதுப்புது உத்திகளை கையாள்கின்றனர். அந்த வகையில், வில்லிவாக்கம் தொகுதியின் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவும், வீடுகட்டும் சித்தாள்களுக்கு உதவுவது, இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, துணிகளுக்கு இஸ்திரி போடுவது என களத்தில் வாக்கு சேகரித்தார். சில இடங்களில் மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.


