News March 23, 2024
அரசியல் ஆசை இருந்தால் பதவியை தூக்கியெறியுங்கள்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அரசியல் ஆசை இருந்தால், தேர்தலில் போட்டியிடலாம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அரசியல்வாதி போல் செயல்படக் கூடாது. அப்படி ஆளுநருக்கு அரசியல் ஆசை இருந்தால் தமிழிசை போல் பதவியை தூக்கி எறிந்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆளுநர் பதவியை தனது சுயநலத்துக்காக பயன்படுத்துவதை அவர் முற்றிலும் நிறுத்த வேண்டும்” என்றார்.
Similar News
News January 24, 2026
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் இன்று வேலை நாளாக இருந்தாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். டிச.30-ம் தேதி அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்கும். இதேபோல், மற்ற மாவட்டங்களுக்கும் குடியரசு தினம் உள்பட 3 நாள்கள் தொடர் விடுமுறை. அதேநேரத்தில், தென்காசியில் நவ.24-ல் விடப்பட்ட மழை விடுமுறையை ஈடுசெய்ய, இன்று அனைத்து பள்ளிகளும் இயங்கும். SHARE IT
News January 24, 2026
இலை துளிர்த்து தாமரை மலரும்: அண்ணாமலை

நேற்று நடந்த NDA கூட்டணி பொதுக்கூட்டத்தில், மோடியை தொடர்ந்து EPS, TTV, அன்புமணி என பலரும் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தனர். அந்த வரிசையில் அண்ணாமலை, சூரியன் மறையும்போது மழை வரும்; அப்போது தமிழ்நாட்டில் இலை துளிர்த்து தாமரை மலரும் எனவும், 2026 தேர்தலில் EPS வெற்றி பெற்று முதலமைச்சராவார் என்று பேசினார். மேலும், திமுக ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இருக்கிறோம் என்றார்.
News January 24, 2026
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று கடலோரம் மற்றும் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. மேலும், குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என மீனவர்களையும் எச்சரித்துள்ளது.


