News December 13, 2024
சார்பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

காவேரிப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அலுவலக பதிவறை, கம்ப்யூட்டர் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23,500 மற்றும் 4 புரோக்கர்களிடமிருந்து 22,500 என மொத்தம் 46 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். நான்கு மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.
Similar News
News March 8, 2026
ராணிப்பேட்டை : தனிமையில் போக பயமா? கவலை வேண்டாம்!

ராணிப்பேட்டை மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.
News March 8, 2026
ராணிப்பேட்டை: கட்சித் தாவிய 100 பேர்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் ஓச்சேரி தனியார் மண்டபத்தில் நேற்று மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. பா.ம.க. மாநில மாணவரணி துணை செயலாளர் ஒச்சேரி பழனி, அதிமுகவைச் சேர்ந்த அருண், திபன், குப்பன் உள்ளிட்ட பலர் அமைச்சர் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
News March 8, 2026
ராணிப்பேட்டையில் அதிரடி கைது

அரக்கோணம் டவுன் போலீசார் அம்மனூர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் இருவர் தப்பியோட முயன்றனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த திவாகர், லோகநாதன் என்பதும், 4 கிலோ குட்காவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.


