News December 13, 2024

உயிரை கொடுக்கவும் தயார்: மோடிக்கு விவசாயி கடிதம்

image

பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் நடத்தும் உண்ணாவிரத போராட்டம், 17வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், அவர் PM மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், விவசாயிகளின் நலனுக்காக என்னுடைய உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளேன். அப்போதாவது மத்திய அரசு விழித்துக் கொண்டு எங்களின் 13 கோரிக்கைளை நிறைவேற்றுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிக்கு அரசின் பதில் என்னவாக இருக்கும்?

Similar News

News March 16, 2026

தமிழகத்தில் 4 மாவட்ட SP-க்கள் அதிரடி மாற்றம்

image

கரூர், ஈரோடு, நாகை, விருதுநகருக்கு புதிய SP-க்களை நியமித்து ECI உத்தரவிட்டுள்ளது. கரூர்: ஹரிகிரண் பிரசாத், ஈரோடு: கிரண் ஸ்ருதி, நாகை: சுர்ஜித் குமார், விருதுநகர்: ஸ்ரீநாதா ஆகியோர் SP-க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கரூர் SP ஜோஷ் தங்கையா பாரபட்சமாக செயல்படுவதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்தார். மாற்றப்பட்ட SP-க்கள் தேர்தல் தொடர்பான வேறு எந்த பணியிலும் ஈடுபடக்கூடாது எனவும் ECI கூறியுள்ளது.

News March 16, 2026

பதவி பறிக்கப்படும்: ஸ்டாலின் எச்சரிக்கை

image

தேர்தல் முடியும் வரை எந்த உள்கட்சி பிரச்னையும் இருக்கக்கூடாது என்று திமுக மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேவையின்றி குழப்பமோ, பிரச்னையோ உண்டாக்கி அது என் காதுகளுக்கு வந்தால், எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே அமைச்சர் பதவி என்றும் அவர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

News March 16, 2026

வீட்டு சிலிண்டர்.. நாட்டு மக்களுக்கு அரசு அறிவிப்பு

image

நாட்டில் நிலவும் கேஸ் தட்டுப்பாடு குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் என மத்திய பெட்ரோலியத் துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சிலிண்டர் பதுக்குதல், கள்ளச் சந்தையில் விற்பதை தடுக்க மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவை இல்லாத நிலையிலும் பீதியுடன் முன்பதிவு செய்வதை மக்கள் தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. SHARE IT

error: Content is protected !!