News December 13, 2024
மக்களவையில் பிரியங்கா கன்னிப் பேச்சு

அரசியலமைப்பு மக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைத்துள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்தார். மக்களவையில் தனது கன்னிப் பேச்சை தொடங்கிய அவர், உ.பி.யின் சம்பால் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டை குறிப்பிட்டு பேசினார். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தையல் தொழிலாளியின் குழந்தைகள் தன்னை சந்தித்ததாகவும், அதில் 17 வயதான சிறுவன் தந்தையின் கனவுபடி டாக்டர் ஆவேன் எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.
Similar News
News March 31, 2026
திருச்சி கிழக்கில் பிரசாரம் செய்ய விஜய் தயார்!

2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய் நேற்று பெரம்பூரில் பிரசாரத்தை தொடங்கினார். இதனையடுத்து அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் நாளை மறுநாள் பிரசாரம் செய்ய ECI-யிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. காலையில் மனுதாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். பெரம்பூரில் அவருக்கு சரியான போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
News March 31, 2026
வணிக கேஸ் சிலிண்டர்.. அதிர்ச்சி செய்தி

வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் நாடு முழுவதும் பல சிறு ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் உணவுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். இந்நிலையில், நாளை ஏப்.1 என்பதால், சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இது ஹோட்டல் உரிமையாளர்கள், ஹோட்டல் உணவை நம்பி வெளியூரில் இருப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News March 31, 2026
வைபவை சீனியர் அணிக்கு அனுப்புங்க: மைக்கேல் வான்

வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணிக்கு விரைவில் தேர்வு செய்ய வேண்டுமென BCCI-க்கு இங்கிலாந்து Ex கேப்டன் மைக்கேல் வான் பரிந்துரைத்துள்ளார். CSK-க்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த சூர்யவன்ஷியின் பேட்டிங்கை பாராட்டிய அவர், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் அவரை சேர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார். மூத்த வீரர்களுடன் இருந்தால் அவருக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்றார்.


