News March 23, 2024
தஞ்சை அருகே தேரோட்டம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ பெரிய நாயகி சமேத நாகேஸ்வரன் திருக்கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னதாக சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருள சிறப்பு ஆராதனை நடைபெற்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
Similar News
News February 11, 2026
தஞ்சாவூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News February 11, 2026
சத்துணவு பணியாளர்களுக்கு திமுகவினர் ஆதரவு

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு சத்துணவு பணியாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியருக்கு அகவிலைப்படி தேசிய மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சரவணன் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்
News February 11, 2026
பேராசிரியர்களுக்கு அதிமுகவினர் ஆதரவு தெரிப்பு

தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் கல்லூரி பேராசிரியர்கள் இன்று வகுப்பறை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், UGC நிர்ணயித்த ரூ.57,800 கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சரவணன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.


