News March 23, 2024
மீண்டும் ஆடுகளத்திற்கு திரும்பும் ரிஷப் பண்ட்

பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்று மதியம் மொஹாலியில் நடைபெற உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இப்போட்டியில் களமிறங்க உள்ளார். 2022ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட கார் விபத்துக்கு பிறகு, தொடர் பயிற்சியின் மூலம் தற்போது முழு உடற்தகுதி பெற்றுள்ளார். சுமார் 454 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆடுகளத்தில் களமிறங்க உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Similar News
News April 29, 2025
ட்ரம்ப் எதிர்ப்பால் வென்ற மார்க் கார்னி

கனடா பொதுத் தேர்தலில் மார்க் கார்னி வெற்றி பெற்றதற்கு, அவருடைய தீவிர ட்ரம்ப் எதிர்ப்பே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு, கனடாவை USA-வின் மாகாணம் என்றும் அன்றைய PM ட்ரூடோவை கவர்னர் என்றும் அழைத்தார். ட்ரம்ப்பின் இந்த பெரியண்ணன் மனப்பான்மையை பெரும்பாலான கனடியர்கள் விரும்பவில்லை என்பது தேர்தல் முடிவில் வெளிப்பட்டுள்ளது. தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரா ட்ரம்ப்?
News April 29, 2025
அதே மணம்.. பூஜா ஹெக்டே கிளாஸிக் லுக்

சமீபமாக, பூஜா ஹெக்டேவின் சேலை கலெக்சன் எனச் சொல்லும் அளவிற்கு அவரது போட்டோஷூட் இருக்கிறது. அந்த வகையில், தனது பாட்டியின் 70 வருட பழமையான காஞ்சிபுரம் சேலையை அணிந்தவாறு, அதன் மணத்தால் அந்த காலத்துக்கே சென்றதாக பூஜா பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். பூஜாவின் நடிப்பில் ரெட்ரோ படம் மே 1-ல் வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார்.
News April 29, 2025
அடைமொழிகளில் நம்பிக்கை இல்லை: அஜித்

பத்ம விருதுக்கு ஜனாதிபதி முர்மு, PM மோடி மற்றும் ரசிகர்களுக்கு அஜித் நன்றி தெரிவித்தார். மேலும், எனக்கு அடைமொழிகளில் எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. நான் என்னை அஜித் அல்லது ஏகே என குறிப்பிட விரும்புகிறேன் எனக் கூறிய அவர், நடிப்பு, கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல்வேறு விஷயங்களை நான் செய்வதற்கு என் நண்பர்கள் தான் காரணம் எனவும் தெரிவித்தார்.