News December 13, 2024

மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.2,000ஆக உயர்வு

image

கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளிலும், கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறும். இதற்கு பூக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் என்பதால், அதன் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களிலும் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,000ஆக விற்பனையாகிறது. இதேபோல், சாமந்தி, பிச்சிப்பூ ஆகியவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

Similar News

News September 14, 2025

வடிவேலுவை விட விஜய்க்கு கூட்டம் குறைவு: ரகுபதி

image

திருச்சியில் நடந்த விஜய்யின் சுற்றுப்பயணத்தின் போது பொது சொத்துக்கள் சேதமடைந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக பேசிய அமைச்சர் ரகுபதி, சட்டம் தன் கடமையை செய்யும் என்று தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வசதிக்காக வார விடுமுறையில் மட்டுமே விஜய் பிரசாரம் செய்கிறார் எனக் கூறிய அவர், 2011ல் திமுகவை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்யும்போது, விஜய்க்கு வந்ததை விட அதிக கூட்டம் வந்ததாகவும் தெரிவித்தார்.

News September 14, 2025

சற்றுமுன்: இபிஎஸ் உடன் மீண்டும் இணைந்தனர்

image

OPS ஆதாரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் EPS தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சிறுவலூர் மாரப்பன் கூறுகையில், செங்கோட்டையன் கட்சி பொறுப்பில் இருந்தவரை தங்களை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை; இதனால் தான் ஓபிஎஸ் தலைமையை ஏற்று சென்றோம். தற்போது அதிமுக பொறுப்பிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதால், மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

News September 14, 2025

குழந்தைகளின் உயிருக்கு உலைவைக்கும் கிரீம் பிஸ்கட்

image

குழந்தைகள் விரும்பி உண்ணும் பொருளாக இருக்கிறது கிரீம் பிஸ்கட். அவர்களுக்கு இதை வாங்கித்தரும் பெற்றோருக்கு இதனால் ஏற்படும் அபாயத்தை பற்றி தெரிவதில்லை. இதிலுள்ள அளவுக்கு அதிகமான சர்க்கரை & மைதா, இளம் வயதிலேயே சர்க்கரை, இதய நோய்களை ஏற்படுத்துகிறதாம். இதில் சேர்க்கப்படும் நிறங்கள் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை பாதிப்பதால் இதனை அவர்களுக்கு கொடுக்க வேண்டாமென டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.

error: Content is protected !!