News March 23, 2024
13 ஆயிரம் பேர் “ஆப்சென்ட்”

+2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பள்ளி மாணவர்கள், 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 94 ஆயிரத்து 75 மாணவ-மாணவிகளில், சுமார் 13ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைவிட ‘ஆப்சென்ட்’ எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
Similar News
News November 5, 2025
மதுரை: சொல்பேச்சு கேட்காத மகன்கள்; தாய் விபரீத முடிவு

மதுரை ஆனையூர் வாகைகுளத்தை சேர்ந்தவர் விமலா (34). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இவரது இரண்டு மகன்களும் இவரது பேச்சு மற்றும் அறிவுரைகளை கேட்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 5, 2025
மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

மதுரை அழகர்கோவில் மற்றும் அச்சம்பத்து துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொய்கரைப்பட்டி, நாயக்கம்பட்டி, அழகர் கோவில் கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூயநெறி, தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாத்தூர்பட்டி, தேத்தாம்பட்டி மற்றும் மந்திகுளம் பகுதிகளில் இன்று (நவ.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
News November 5, 2025
மேலூரில் பொது பணித் துறை ஊழியர் திடீர் மரணம்

மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் கதிர்வேல் முனியாண்டி (46). இவர் மேலூரில் பொது பணி துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இன்று மாலை அலுவலகத்தில் இருந்து டூவீலரில் சென்ற போது, சந்தைப்பேட்டை அருகில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு இறந்து போனார். இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


