News December 13, 2024
சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற என்கவுண்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாண்டேவாடா, நாராயண்பூர் எல்லையில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர். கடந்த அக்டோபர் மாதத்தில் இங்கு 38 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
Similar News
News March 6, 2026
‘ரஜினி 173’ சிக்னல் கொடுத்த சிபி

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். ஒன் லைனர் சொல்லி ரஜினியிடம் ஓகே வாங்கியிருந்த சிபி சக்கரவர்த்தி, தற்போது Bounded ஸ்கிரிப்டை எழுதி முடித்துள்ளார். இதையடுத்து, மே மாதத்தில் ஷுட்டிங்கை தொடங்குவதற்கான Pre-Production வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 2027 பொங்கல் ரிலீஸை குறிவைத்துள்ள படக்குழு, விரைவில் முழு Cast & Crew-ஐ அறிவிக்கவுள்ளது.
News March 6, 2026
தாயுமானவர் பொன்மொழிகள்

*நல்ல மனதுக்கு உலகம் நல்லதாகவும், கெட்ட மனதுக்கு உலகம் கெட்டதாகவும் தென்படுகிறது *நல்லெண்ணம் வளர வளர அது நமது உடலில் ஊறியதாக ஆகிவிடுகிறது. பிறகு கெட்ட எண்ணம் என்பதே வருவதில்லை. இது எல்லாவற்றிற்கும் அடிப்படை பழக்கமே *நல்ல எண்ணம் நமக்கு நல்ல நலம் தந்து, வாழ்வினை வளமடையச் செய்கிறது *ஒழுக்கத்தில் நிலைநின்றவர்களுக்கு மன உறுதி அதிகரிக்கிறது. பின்னர் அதுவே ஆத்ம சக்தியாக வடிவம் எடுக்கிறது.
News March 6, 2026
ஈரானின் உயர் தலைவரை தேர்வு செய்வேன்: டிரம்ப்

ஈரானின் புதிய உயர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் தனது பங்கு இருக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உயர் தலைவராக கமேனியின் மகன் முஜ்தபா பதவியேற்பதை தான் விரும்பவில்லை என தெரிவித்த அவர், அமைதியை நிலைநாட்டக் கூடிய ஒருவர் பதவிக்கு வரவேண்டும் என்றார். ஈரானியர்கள் நேரத்தை வீணடித்து கொண்டிருப்பதாகவும், வெனிசூலாவை போல ஈரானின் உயர் தலைவர் தேர்வில் தனது தலையீடு இருக்கும் எனவும் அவர் கூறினார்.


