News March 23, 2024
அரியலூரில் தேர்தல் முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம்

அரியலூரில் மக்களவைத் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ண தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் இருப்பு, சமூக வலைத்தளங்களை கண்காணித்தல், தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள், தேர்தல் செலவினங்கள், தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
Similar News
News November 5, 2025
அரியலூர்: பேருந்து மோதி 93 வயது முதியவர் பலி

ஜெயங்கொண்டம் அருகே உள்ள வீராக்கன் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி பிச்சப்பிள்ளை (93). இவர் ஆமணக்கந்தோண்டியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து வந்தபோது அவருக்கு பின்னால் வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் பிச்சப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
அரியலூர்: படிவம் வழங்கும் பணி-ஆட்சியர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான கணக்கெடுப்பு படிவம் நேற்று முதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம், படிவம் வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர், அரியலூர் கோட்டாச்சியர், அரியலூர் வட்டாட்சியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News November 5, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் (04.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.


