News December 12, 2024
ஜீவனாம்ச வழக்கில் 8 விஷயங்களை கவனிக்கணும்: SC

ஜீவனாம்சத்தை நிர்ணயிக்க இந்த அம்சங்களை பின்பற்ற SC வழிகாட்டுதல்: 1)இருதரப்பினரின் சமூக, நிதி நிலைமை. 2)மனைவி & குழந்தைகளின் நியாயமான தேவைகள் 3)இருதரப்பினரின் கல்வித்தகுதி, பணிநிலைமை 4)தனிநபரின் வருமானம்(அ) சொத்து 5)திருமண வீட்டில் பெண்ணின் வாழ்க்கைத்தரம் 6)குடும்ப கடமைகளுக்காக வேலையை விட நேர்ந்த நிலை 7)வேலை இல்லாத இணையரின் வழக்குச் செலவு 8)கணவனின் பண வசதி, வருமானம், பராமரிப்பு கடமைகள் & கடன்கள்.
Similar News
News September 14, 2025
BREAKING: தசரா விடுமுறை.. நாளை முதல் சிறப்பு அறிவிப்பு

குலசை தசரா திருவிழா இன்னும் 10 நாள்களில் தொடங்கவுள்ளது. அதனையொட்டியும், தீபாவளியை முன்னிட்டும் 3 மாதங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மைசூரு – நெல்லை இடையே நாளை முதல் நவ.24 வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல், நாளை முதல் அக்.27 வரை மைசூரு – ராமநாதபுரம் இடையேயும், செப்.18 – நவ.29 வரை மைசூரு – காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. SHARE IT.
News September 14, 2025
அண்ணாமலை காலாவதியான தலைவர்: கோவி.செழியன்

CM ஸ்டாலினை விமர்சிப்பதில் முன்னிலையில் நின்ற அண்ணாமலை, இப்போது கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக அமைச்சர் கோவி.செழியன் விமர்சித்துள்ளார். மகா யோக்கியரை போல வேஷம் போட்டு, ஒரு அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறி, தமிழகத்திற்கு பின்னடைவை தேடித் தந்தவரின் அனைத்து கள்ளத்தனமும் இப்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. மொத்தத்தில் அவர் காலாவதியான அரசியல் தலைவராகி விட்டார் என சாடியுள்ளார்.
News September 14, 2025
கவினுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி

பிரபல டான்ஸ் மாஸ்டர் சதீஷ், கவினை வைத்து ‘கிஸ்’ என்ற படத்தை எடுத்துள்ளார். கவினின் ‘டாடா’ படத்துக்கு கிடைத்த வெற்றி, ப்ளடி பெக்கருக்கு கிடைக்கவில்லை. இதனால் கிஸ் படத்தை வெற்றிப்படமாக மாற்றும் வேலையில் அவர் பிஸியாக பணியாற்றி வருகிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்துக்கு, விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.