News March 23, 2024

திருப்பத்தூர் அருகே போலீசார் குவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் தங்க மலையில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ சென்றாய சுவாமி ஆலயத்தின் 95 ஆம் ஆண்டு உற்சவ விழாவின் ஐந்தாம் நாளான இன்று மாலை 6 மணிமுதல் 7 மணிக்குள் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் நாட்றம்பள்ளி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News November 5, 2025

திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் மூதாட்டி உயிரிழப்பு!

image

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பா (90) என்பவர் கோயம்புத்தூரில் நடைபெறும் தனது பேரன் திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று (நவ.4) பயணம் செய்தார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 5, 2025

ஓடும் ரயிலில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு

image

மகாராஷ்டிரா மாநிலம் சேர்ந்த புஷ்பா (வயது 90) என்பவர் கோயம்புத்தூரில் நடைபெறும் தனது பேரன் திருமண நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று (நவ4) பயணம் செய்தார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே செல்லும் பொழுது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 4, 2025

பாலியல் தொந்தரவு கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது!

image

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் சேர்ந்தவர் பிரபு இவர் முன்னாள் ராணுவ வீரர் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் பாலியல் தொந்தரவு கொடுத்துயுள்ளார். இவரது தாயார் இன்று (நவ.4) ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் பிரபுவை கைது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!