News December 12, 2024

குமரி மாவட்டத்தில் 14ஆம் தேதி மக்கள் நீதிமன்றம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வருகிற 14-ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. விபத்தில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள், உரிமையியல் வழக்குகள், செக்மோசடி, மணவிலக்கு தவிர்த்த குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சட்டப்படி ஆணை குழு செயலாளர் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News August 22, 2025

குமரியில் கொலை; பகீர் வாக்கு மூலம்

image

மேக்கா மண்டபம் சந்தையில் மணி என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் மேசாக் என்பவரைகைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் மணி வைத்திருந்த மது பாட்டில்களை காணவில்லை அவர் என்னை சந்தேகப்பட்டு எழுப்பி கேட்டார். இதில் ஏற்பட்ட தகறாலில் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

News August 22, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆக.22) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.62 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 64.90 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.43 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.53 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 556 கன அடி, பெருஞ்சாணிக்கு 154 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

News August 22, 2025

முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு 27% போனஸ்!

image

முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக C.I.T.U. தொழிற்சங்கத்திற்கும், முந்திரி ஆலை நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டு, கடந்தாண்டு போன்று இந்த ஆண்டும் 20% போனஸ், 2% ஊக்கத்தொகை, 5% விடுப்பு கால ஊதியம் என மொத்தம் 27% போனஸ் வழங்க நிர்வாகத்தினர் முன் வந்தனர் என T.N. முந்திரி பருப்பு C.I.T.U தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிங்காரன் கூறினார்.

error: Content is protected !!