News December 12, 2024
வேலூரிலிருந்து 580 போலீசார் திருவண்ணாமலைக்கு சென்றனர்

வேலூர் மாவட்டத்திலிருந்து பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டமாக 200 போலீசாரும், 2வது கட்டமாக 350 போலீசாரும், 3வது கட்டமாக நேற்று காலை மேலும் 30 போலீசார் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர். தீபத் திருவிழாவுக்காக வேலூர் மாவட்டத்திலிருந்து இதுவரை 580 போலீசார் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 9, 2025
உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – எச்சரிக்கை

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலத்த நீர்வரத்தால் ஆற்றுப்பாலம் மற்றும் குறுக்கு வழிகள் நீரில் மூழ்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுப்புற பாசன கால்வாய்கள் நிரம்பி வழிந்ததால், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. பாதுகாப்பு காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
News August 9, 2025
வேலூர் மக்களுக்கு முக்கிய தகவல்

வேலூரில், பேருந்து நிலையங்கள், ஓட்டல்களில் உணவு பொருட்களை MRP விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான தேதியை மாற்றுவது, அதன்மேல் வேறு ஸ்டிக்கரை ஒட்டுவது போன்றவற்றை கண்டால் FSSAI-க்கு 94440 42322 என்ற வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம். அல்லது சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350673>>தொடர்ச்சி<<>>
News August 9, 2025
வேலூர் மக்களுக்கு முக்கிய தகவல்

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அல்லது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ, புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது, கடையின் முழுமையான முகவரி உள்ளிட்ட ஆதாரங்களோடு புகார் செய்யும்போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.