News December 12, 2024

16 வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபட்டால்….

image

அமாவாசை முடிந்து வளர்பிறையில் வரும் 16 வியாழக்கிழமைகளில் குருபகவானை தொடர்ந்து வேண்டினால், வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. காலையில், குளித்து முடித்து பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி குரு மந்திரம் சொல்ல வேண்டும். வீட்டில் பூக்கும் மலர்களை சாற்றி, இனிப்புகளை படைத்து வழிபடலாம். மாலையில் சிவன் சன்னிதானத்தில் விளக்கேற்றி வந்தால், குருவின் பார்வை நம் பக்கம் திரும்பும்.

Similar News

News September 14, 2025

ரேஷன் பொருள்கள் கிடைக்கலையா? இத செய்யுங்க

image

நமக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாகவோ (அ) குறைந்த விலையிலோ கிடைப்பதால் அதனை எந்த குறையும் சொல்லாமல் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பது, சேவை குறைபாடு, தரம் குறைவு, பொருள்கள் கிடைக்கவில்லை போன்ற பிரச்னைகள் இருந்தால் அதனை அரசிடம் தெரிவிக்கலாம். இதற்கு, <>www.tnpds.gov.in<<>> தளத்திலோ, 1967 என்ற எண்ணிலோ புகாரளியுங்கள். இந்த முக்கியமான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 14, 2025

BREAKING: முடிவை மாற்றிய செங்கோட்டையன்!

image

தன்னை கட்சியிலிருந்து நீக்கினால் கூட அமைதியாக இருப்பேன் என செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம், TTV தினகரனை சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க EPS-க்கு விடுத்த 10 நாள்கள் கெடு நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தன்னை நீக்கினாலும் அமைதியாக இருப்பேன் என கூறுவதன் மூலம் மனம் மாறிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News September 14, 2025

மூலிகை: அரைக்கீரையும் அற்புத நன்மைகளும்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
✦அரைக்கீரையை தினமும் உண்டு வந்தால் தேக பலமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும். இதயம் வலிமை பெறும்.
✦அரைக்கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது. குடல் புண்கள் விரைவில் குணமாகும்.
✦வாதநோய் உள்ளவர்கள் அரைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதநோய் குறையும்.
✦அரைக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். SHARE IT.

error: Content is protected !!