News March 23, 2024
ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள எச்சரிக்கை

போடி- மதுரை ரயில்பாதை சில மாதங்களுக்கு முன்பு, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு போடி-மதுரை விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போடி-மதுரை ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டு 25 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இருப்புப்பாதையை மிக கவனமாக, கடந்து செல்ல தென்னக ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் இன்று அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 5, 2025
மேலூரில் பொது பணித் துறை ஊழியர் திடீர் மரணம்

மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்தவர் கதிர்வேல் முனியாண்டி (46). இவர் மேலூரில் பொது பணி துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இன்று மாலை அலுவலகத்தில் இருந்து டூவீலரில் சென்ற போது, சந்தைப்பேட்டை அருகில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு இறந்து போனார். இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 4, 2025
மதுரை: பாஜக சார்பில் சர்ச்சை போஸ்டர்

மதுரை மாநகரம், இந்திய அளவில் தூய்மையற்ற நகரமாக நேற்றைய தினம் செய்தி வெளிவந்ததை தொடர்ந்து தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப் பொறுப்பாளர் ராஜ்குமார் அவர்கள் அமைச்சர் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மூவரும் கையில் கோப்பை ஏந்தி நிற்பது போல் சர்ச்சை போஸ்டர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
News November 4, 2025
மதுரை: பாஜக சார்பில் சர்ச்சை போஸ்டர்

மதுரை மாநகரம், இந்திய அளவில் தூய்மையற்ற நகரமாக நேற்றைய தினம் செய்தி வெளிவந்ததை தொடர்ந்து தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப் பொறுப்பாளர் ராஜ்குமார் அவர்கள் அமைச்சர் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மூவரும் கையில் கோப்பை ஏந்தி நிற்பது போல் சர்ச்சை போஸ்டர் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.


