News December 11, 2024

என் பாட்டை யூஸ் பண்றது எனக்கு பெருமைதான் ❤️❤️

image

இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற ஜாம்பவான்களுக்கே டஃப் கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா. கானா, மெலடி, பிஜிஎம் என அனைத்திலும் புகுந்து விளையாடியவர். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறும் போது, எனது பாடல்களை இப்ப உள்ள படங்களில் பயன்படுத்துறாங்க. இந்த காலத்து பசங்களுக்கும் என் பாட்டு ரீச் ஆகுது. அதனால என் பாட்டை பயன்படுத்த கூடாதுனு நான் யார்ட்டயும் சொல்ல மாட்டேன். அது எனக்கு பெருமைதான் என்றார்.

Similar News

News September 14, 2025

கமலுக்கு மட்டும் சிறப்பு கவனிப்பு: ரஜினி

image

கமல்ஹாசனுக்கு மட்டும் சிறப்பு கவனிப்புடன் இளையராஜா பாடல்கள் அமைத்து கொடுத்தாக ரஜினி தெரிவித்துள்ளார். கமல், ரஜினி, விஜயகாந்த் என பலருக்கு ஒரே டைமில் இளையராஜா இசையமைத்துள்ளார். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடல்கள் அமைத்து கொடுப்பதாக இளையராஜா சொல்வார், ஆனால் அதில் உண்மையில்லை என்று ரஜினி கூறியுள்ளார். ‘நாயகன்’ பட தென்பாண்டி சீமையிலே பாடலை அவர் பாடினால், அப்போதே ஆயிரம் பேர் அழுதுவிடுவீர்கள் என்றார்.

News September 14, 2025

பெற்றோர்களே, இதை கவனிங்க

image

பெற்றோர்களே இந்த விஷயங்களையும் கவனியுங்கள்: *குழந்தைக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவை கொடுத்து பழக்கவும் *தண்ணீர் பாட்டிலை ஸ்டீல் (அ) காப்பரில் வாங்கலாம். வாய் சிறிதான பாட்டில் நல்லது. *பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிறன்று முழு நேரத்தையும் குழந்தையுடன் செலவழியுங்கள் *வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது; பாதுகாப்பும் கூட *பிடிக்காத விஷயத்தை செய்ய வற்புறுத்தாதீர்.

News September 14, 2025

நான்கு நாள்களுக்கு கனமழை பெய்யும் : IMD

image

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த சுழற்சி காரணமாக 16-ம் தேதி வேலூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், TV.மலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 17-ம் தேதி 8 மாவட்டங்களிலும், 18-ம் தேதி 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று IMD கூறியுள்ளது. 19-ம் தேதி வரை கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!