News March 23, 2024

ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.இதனால்,மோப்பநாயின் உதவியுடன் ரயில் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் தீவீர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Similar News

News November 15, 2025

திண்டுக்கல்லில் மின்தடை அறிவிப்பு

image

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (நவ.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திண்டுக்கல் மாநகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை மற்றும் அதனை சுற்றுயுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதற்கு ஏற்றார்போல் வேலைகளை திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News November 15, 2025

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

image

திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். கூலிவேலை பார்த்து வந்த இவர், சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வந்தார். தனது ஆட்டிற்கு தீவனத்தை பறிப்பதற்காக ஊரின் அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் செடிகளை அறுத்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 15, 2025

திண்டுக்கல் காவல்துறை சார்பில் அறிவுரை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை “சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டாம்” என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, சிறுவர்களிடம் வாகனங்களை கொடுக்க வேண்டாம் எனவும் விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளனர்.

error: Content is protected !!