News March 23, 2024
காவல்துறை அதிகாரி மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

காவல் உதவி ஆணையர் ஏ.கே. சிங் மோசமாக நடந்து கொண்டதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான அவர், நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஏ.கே. சிங் மோசமாக நடந்து கொண்டதால், அவரை பணிநீக்கம் செய்யும்படி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். எந்த விதத்தில் மோசமாக நடந்தார் என கெஜ்ரிவால் குறிப்பிடவில்லை.
Similar News
News April 20, 2025
சின்னத்துரை மீதான தாக்குதல்: 2 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்டகிராம் மூலம் பழகியவர்கள் சின்னத்துரையை தனியாக அழைத்து தாக்கிவிட்டு செல்போனை பறித்துச் சென்றனர். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த போலீஸ், சங்கரநாராயணன், சக்திவேல் ஆகியோரை கைது செய்துள்ளது. இதில், தொடர்புடைய மேலும் 3 பேரையும் போலீஸ் தேடி வருகிறது.
News April 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 20- சித்திரை- 07 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:00 PM – 4:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶ குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: சப்தமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶ பிறை: தேய்பிறை
News April 20, 2025
தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா

ஈஸ்டரை முன்னிட்டு உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நாளை ( ஏப்ரல் 21 ) வரை தாக்குதல் நடத்தப்படாது என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரை முடிவு கொண்டுவர முடியும் என அமெரிக்கா கூறி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து 2022 பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது.