News December 11, 2024
கொரோனா நிதி ₹265 கோடி பயன்படுத்தப்படவில்லை

தமிழகத்திற்கு வழங்கப்பட்ட கொரோனா நிதியில் ₹265 கோடி நிதியை செலவிடப்படவில்லை என CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடரை சமாளிக்க மத்திய அரசின் ₹1,435 கோடி, மாநில அரசின் ₹351 கோடி என மொத்தம் ₹1,787 கோடி நிதியை தேசிய சுகாதார இயக்கம் வாங்கியது. இதில் ₹264.48 கோடி நிதி பயன்படுத்தப்படவில்லை. அதேபோல, 3,757 ஆக்சிஜன் செறிவூட்டிகளில் 147 பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 27, 2025
தமிழ்நாடு முழுவதும் கட்டுப்பாடு அமல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை வைத்து வழிபாடு செய்ய காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தடையில்லா சான்று பெற்று விநாயகர் சிலையை நிறுவ வேண்டும். பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகளை நிறுவ கூடாது. சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள், கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
News August 27, 2025
BREAKING: ஓய்வு பெற்றார் அஸ்வின்

IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் அஸ்வின் சற்றுமுன் அறிவித்துள்ளார். 2009-ல் CSK அணிக்காக களமிறங்கிய அவர், RR, DC உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி, 187 (IPL) விக்கெட்டுகள், 833 ரன்களை எடுத்துள்ளார். கடந்த ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றிருந்தார். கடந்த IPL சீசனில் CSK-வில் இடம்பெற்ற அவர், சரியாக விலையாடவில்லை என சர்ச்சை எழுந்தது.
News August 27, 2025
SPORTS ROUNDUP: துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கம்!

◆ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் சிப்ட் கவுர் கம்ரா தங்கம் வென்றார்.
◆உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணாய் மற்றும் பிவி சிந்து ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
◆அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார் வீனஸ் வில்லியம்ஸ்.