News March 23, 2024

யார் இந்த பாஜக வேட்பாளர்?

image

நாகை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம். ரமேஷ் களமிறக்கப்பட்டுள்ளார். திருவாரூர், சித்தமல்லியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி எஸ்.ஜி முருகையனின் மகனான எஸ்.ஜி.எம்.ரமேஷ், 2022ஆம் ஆண்டு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இதனையடுத்து பொதுக்கூட்டம், போராட்டத்திற்கு ஆட்களை திரட்டுவது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த இவரது செல்வாக்கை அறிந்த பாஜக தற்போது இவரை களமிறக்கியுள்ளது.

Similar News

News November 15, 2025

அரசுப் பணியாளர் தேர்வாணைய கணினி தேர்வு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வரும் 16 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான கணினி வழித்தேர்வு நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி, திருக்குவளை பொறியியல் கல்லூரி மற்றும் ஈசனூர் ஆரிபா கல்லூரி) ஆகிய 03 இடங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்

News November 15, 2025

நாகை மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்

image

நாகை மாவட்டத்தில் நவம்பர் 17 புலியூர், 18ந்தேதி புலியூர், நாகூர் தர்கா, 19ந்தேதி நாகூர் தர்கா, பெருங்கடம்பனூர், 20ந் தேதி கீழ தன்னிலப்பாடி, 21 ந்தேதி திருக்கண்ணங்குடி , 22ந் தேதி சீயாத்தமங்கை, செருநள்ளுர் ஆகிய ஊராட்சிகளில் ஆதார் அட்டை திருத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

News November 15, 2025

வேளாங்கண்ணி பேராலய தொழிலாளி தற்கொலை

image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் ராஜேந்திரன்(57). இவர் அடிக்கடி வயிற்றுவலி நோயால் அவதிப்பட்டு வந்ததால், பிரதாபராமபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!