News December 10, 2024
இரண்டே நாளில் 200 பேரை கொலை செய்த ரவுடி!

ஹைதி நாட்டின் தலைநகரான போர்ட் ஓ பிரின்ஸை, பல ஆண்டுகளாக மோனல் பெலிக்ஸ் என்ற ரவுடி தனது கட்டுக்குள் வைத்துள்ளான். சில தினங்களாக பெலிக்ஸின் மகனுக்கு தீராத காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பில்லி சூனியமே காரணம் என நம்பிய பெலிக்ஸ், அப்பகுதியைச் சேர்ந்த 200 மந்திரவாதிகளை தனது ஆட்களை விட்டு இரண்டே நாளில் கொடூரமாக கொலை செய்துள்ளான். இதனை ஹைதி அரசாங்கம் உறுதி செய்த போதிலும், அவனை நெருங்க தயங்குகிறது.
Similar News
News September 1, 2025
D Mart-க்கு தடை விதிக்க வேண்டும்: வேல்முருகன்

தமிழகத்தில் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் D Mart போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற நிறுவனங்களால் சில்லறை கடைகளில் உணவு, குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இக்கடை வந்துள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.
News September 1, 2025
ஆல் ஏரியாலயும் தோனி கில்லி.. PHOTO

6 மாதம் விவசாயி, 3 மாதம் கிரிக்கெட் வீரர் என்பதே தோனியின் இலக்கணமாக அவரது ரசிகர்கள் கூறுவது. அதற்கேற்றார்போல் தான் அவரது செயல்பாடும் இருக்கும். அந்த வகையில் தோனி கோல்ஃப் விளையாடும் போட்டோ வைரலாகிறது. ‘எப்பவுமே என் தலைவன் எனர்ஜிட்டிக்கா இருப்பாப்ல’ என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதனிடையே, வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் அவரை Mentor ஆக நியமிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
News September 1, 2025
சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா?

‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் நஸ்ரியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சூர்யா, மீண்டும் போலீஸ் அதிகாரியாக அவதாரம் எடுக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வெங்கி அட்லூரி படத்திலும் சூர்யா கமிட்டாகியுள்ளார்.