News March 23, 2024
தேர்தல்: நேரடியாக மோதும் பாஜக-காங்கிரஸ்

திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் பொன்.பாலகணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் ரஞ்சன் குமார் அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன?
Similar News
News November 5, 2025
திருவள்ளூர்: உடல் துண்டாகி பெண் பலி!

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள கே.டி.ஜி நகரில் வசித்து வருபவர் தனசேகர். இவர் மனைவி புஷ்பா. இவர் கடைக்கு செல்வதற்காக செவ்வாபேட்டை ரயில் நிலைய தண்டவாளத்தை இன்று மாலை கடந்து சென்றுள்ளார். அப்போது சரக்கு ரயில் புஷ்பா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி பலியானார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 5, 2025
வேப்பம்பட்டில் ஆய்வு செய்த ஆட்சியர் மு.பிரதாப்

திருவள்ளூர் ஆட்சியர் மு.பிரதாப் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் வேப்பம்பட்டில் ரூ.44 கோடியில் இரயில்வே மேம்பாலம் கடவு எண் 14 கட்டுமானப் பணிகளை இன்று நவம்பர் 04 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர். இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்திரவிட்டார். உடன் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News November 5, 2025
ஆவடி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

ஆவடியில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


