News March 23, 2024
நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம்-நாகர்கோவில் 25ஆம் தேதியும், நாகர்கோவில்-தாம்பரம் 24 & 31ஆம் தேதிகளிலும், நாகர்கோவில்-சென்ட்ரல் 24ஆம் தேதியும், சென்ட்ரல்-நாகர்கோவில் 25ஆம் தேதியும், எழும்பூர்-நாகர்கோவில் 28ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதனால் குமரி-புனே எக்ஸ்பிரஸ் ரயில் நாளை தாமதமாக புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 29, 2025
எல்லாத்தையும் அடமானம் வச்சிட்டேன்.. நடிகர் நானி

ஹிட் 3 படத்திற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் அடமானம் வைத்துவிட்டதாக நடிகர் நானி தெரிவித்துள்ளார். படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நானி, இந்தப் படத்திற்காக நான் தயாரித்த கோர்ட் படம் உள்பட எல்லாவற்றையும் அடமானம் வைத்துவிட்டேன்; இனியும் வேண்டுமென்றால் ராஜமௌலி-மகேஷ்பாபு படத்தை தான் அடமானம் வைக்க வேண்டும் என்று நகைச்சுவையாக பேசினார். இதைக்கேட்டு இயக்குனர் ராஜமௌலி சிரித்தார்.
News April 29, 2025
அமெரிக்கா யார் பக்கம்? நிபுணர்கள் கணிப்பு

இந்தியா-பாக். இடையே போர் மூண்டால், USA இந்தியாவுக்கு ஆதரவாக நிற்குமென ராஜீய நிபுணர்கள் கணித்துள்ளனர். 1971 இந்தியா-பாக். போரின் போது USA, பாக்.-க்கு ஆதரவளித்தது. இந்நிலையில், இந்தியா குவாட் அமைப்பில் இருப்பதாலும், சீனா-பாக். இடையே நல்லுறவு நீடிப்பதாலும், USA இந்தியாவை பகைக்காது என்கின்றனர். அதேசமயம் தெற்காசியாவில் இந்தியா வலிமையடைவதை USA விரும்பாது என்றும் இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.
News April 29, 2025
PM கிஷான் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்க முடிவு!

மத்திய அரசின் ‘PM கிஷான்’ உதவித்தொகையின் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். 19-வது தவணை ₹2000 கடந்த பிப்.24-ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்ட நிலையில், 20-வது தவணையை ஜூன் மாதம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 18-வது தவணை அக்டோபரிலும், 17-வது தவணை ஜூன் 2024லும் வழங்கப்பட்டது.