News December 10, 2024

நர்ஸ் பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழந்ததா?

image

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் நர்ஸ் பிரசவம் பார்த்ததால் தான், குழந்தை உயிரிழந்ததாகக் கூறி குழந்தையின் தந்தை, உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர் இருக்க வேண்டும். ஆனால், ஞாயிறு இரவில் டாக்டர்கள் இல்லாததால், செவிலியரே பிரசவம் பார்த்ததாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். பிஞ்சு மரணத்துக்கு யார் காரணம்?

Similar News

News September 13, 2025

மேடையில் கண் கலங்கிய கமல்..!

image

இளையராஜாவின் பாராட்டு விழாவில் பேசிய கமல், மேடையிலேயே கண் கலங்கினார். அவருக்கு பாராட்டு விழா எடுத்ததற்கு ரசிகனாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கமல் உருக்கமாக கூறினார். இளையராஜா எனக்கு அண்ணன் எனத் தெரிவித்த அவர், உனை ஈன்ற உலகுக்கு நன்றி என்ற பாடலை கண்கலங்க மேடையிலேயே பாடியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

News September 13, 2025

உங்களுக்கு IT நோட்டீஸ் வராம இருக்கணுமா?

image

உங்களை தேடி IT நோட்டீஸ் வருவதை தவிர்க்க, இந்த Limits-ஐ மீறாதீர்: *ஆவணம் இன்றி பணப்பரிசு Limit: ₹50000 *ஒரே நாளில் ஒருவரிடம் இருந்து பணம்பெறும் Limit: ₹2 லட்சம் *ஒரே நாளில் சேமிப்பு கணக்கில் கேஷ் டெபாசிட் Limit: ₹10 லட்சம் *ஒரே நாளில் கரன்ட் அக்கவுன்ட்டில் டெபாசிட் Limit: ₹50 லட்சம் *கிரெடிட் கார்டுக்கு ஒரே நாளில் ரொக்கமாக செலுத்தும் Limit: ₹1 லட்சம் *சொத்து விற்பனை Limit: ₹30 லட்சம்.

News September 13, 2025

விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்: ராமதாஸ்

image

அன்புமணி – ராமதாஸ் இடையில் ஏற்பட்ட பிரச்னையால் பாமக இரண்டாக பிரிந்து இருக்கிறது. இதனால் தான் பாமக இதுவரை கூட்டணி அமைக்கவில்லை. இந்நிலையில், தந்தை – மகன் பிரச்னை கடந்த 10-ம் தேதியே முடிந்து விட்டதாக சற்றுமுன் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தீயவை கீழே போகும், நல்லவை மேலே போகும் எனக் கூறிய அவர், யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!