News December 10, 2024
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் மழை

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வரும் மன்னர் வளைகுடா அருகே நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்ற காரணத்தால், இராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை நாளை(டிச.13) முதல் மழையானது படிப்படியாக துவங்கும். மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பெரும்பான்மையான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோரத்தை ஒட்டிய ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது
Similar News
News August 25, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (24-08-2025) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசரநிலை அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை எதிர்கொண்டால், பொதுமக்கள் உடனடியாக காவல்துறை உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். *உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க*
News August 24, 2025
BREAKING இராம்நாடு மக்களுக்கு குட் நியூஸ்!

ராமநாதபுரத்தில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ONGCக்கு SEIAA அனுமதி வழங்கிய நிலையில், அதனை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அத்துடன், “ONGC நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெறுமாறு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அறிவுறுத்தியதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். TN-ல் இனி எப்போதும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
News August 24, 2025
BREAKING இராமநாதபுரம் சாலை விபத்தில் இருவர் பலி

இராமநாதபுரம் மாவட்டம் களக்குடி அருகே இன்று (ஆகஸ்ட்.24) புதுக்கோட்டையில் இருந்து வந்த கார் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த நான்கு பேரில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.