News December 9, 2024
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல்லில் இன்று 09-12-2024 இரவு 11.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
Similar News
News August 18, 2025
திண்டுக்கல்: பேக்கரியில் கொள்ளை

திண்டுக்கல்: வடமதுரை அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.62 ஆயிரம் பணம், கடையில் இருந்த சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 18, 2025
திண்டுக்கல்: LIC நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?

திண்டுக்கல் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 18, 2025
BREAKING:திண்டுக்கல் அமைச்சர் வழக்கில் திருப்பம்

அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், இன்று(ஆக.18) உச்சநீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.