News December 9, 2024

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

image

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை ஜன.10க்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. விசாரணையை இழுத்தடிக்கும் வகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 44இல் இருந்து 2000ஆக உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி, செந்தில் பாலாஜி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என ஒய்.பாலாஜி என்பவர் வழக்குத்தொடர்ந்தார். இதற்கு செந்தில் பாலாஜி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Similar News

News March 16, 2026

தேர்தல்: மதுபான கடை நேரம் குறைப்பு

image

புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், மதுபான கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் குடோன்களில் இருந்து காலை 10 – மாலை 5 மணி வரை மட்டுமே மதுபானங்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும் கலால் துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக இரவு 11 மணி வரை மதுக்கடைகளும், 12 மணி வரை ரெஸ்ட்டோ பார்களும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2026

ஆணவக் கொலைக்கு எதிராக கர்நாடக அரசின் மசோதா!

image

ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்றும்படி பல ஆண்டுகளாக TN-ல் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி KN பாஷா தலைமையில் ஆணையம் மட்டுமே திமுக அரசால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆணவக் கொலையை கடும் குற்றமாக கருதி ’Iva Nammava’ மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆணவக் கொலை செய்தோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையை இம்மசோதா பரிந்துரைக்கிறது. இதுகுறித்து உங்க கருத்து என்ன?

News March 16, 2026

தேர்தல் பரப்புரைக்கான டைம் இதுதான்

image

காலை 6 மணி – இரவு 10 மணி வரை மட்டுமே அரசியல் கட்சிகள் பரப்புரை செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தை மீறி பரப்புரை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அவர், ஆன்லைன் மூலம் மட்டுமே அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பரப்புரைகளுக்கு அனுமதி கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!