News December 9, 2024

மகளிர் சுயஉதவி குழுவில் ரூ.13.45 லட்சம் மோசடி

image

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி எஸ் எஸ் கோவில் தெருவில் விநாயகர் மகளிர் சுய உதவி குழுவில் கடனாக பெற்ற ரூ.13.45 லட்சம் பணத்தை உத்திரச்செல்வி என்ற பெண் மோசடி செய்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று (டிச.9) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் விநாயகர் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் புகார் மனு கொடுத்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News September 5, 2025

தூத்துக்குடி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க

News September 5, 2025

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பிரிவிற்கு 3 சுகாதாரப் பணியாளர்கள், 3 காவலாளிகள், மற்றும் ஒரு கணினி உள்ளீட்டாளர் பணி இடங்கள் காலியாக உள்ளது. இந்த தற்காலிக பணிக்கு வரும் 15ஆம் தேதிக்குள் அரசு மருத்துவமனையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2025

தூத்துக்குடி: இனி அலைச்சல் இல்லை.. எல்லாம் ONLINE தான்!

image

தூத்துக்குடி மக்களே, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: <>NSDL<<>>
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க.. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!