News March 23, 2024

நெல்லை: அளவற்ற மகிழ்ச்சியில் மாணவர்கள்

image

தமிழகம் முழுவதும் நேற்று (மார்ச் 22) பிளஸ் 2 தேர்வு முடிந்தது. நெல்லை மாவட்டத்திலும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் டூ தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ மாணவிகள் தங்கள் அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து செய்தியாளரிடம் அவர்கள் கூறும் போது பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்புக்கு செல்லும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர்.

Similar News

News April 18, 2025

நெல்லை: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RailMadad* என்ற அப்ளிகேஷனை இந்த <>லிங்க்<<>> மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *

News April 18, 2025

கொலை வழக்கில் முக்கிய பெண் குற்றவாளி கைது

image

நெல்லை, டவுன் தொட்டி பாலத்தெருவைச் சேர்ந்த முன்னாள் காவல் உதவி அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த மாதம் 18-ம் தேதி இடப்பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நூர்நிஷா என்பவர் தலைமறைவாக இருந்தார். நேற்று (ஏப்.17) மேலப்பாளையத்தில் நெல்லை தனிப்படையினர் நூர்நிஷாவை கைது செய்தனர். அவர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார்.

News April 18, 2025

ஜாகிர் உசேன் கொலை; 4 பேர் மீது குண்டாஸ்

image

நெல்லை டவுன் ஜாஹிர் உசேன் பிஜிலி என்பவரை நிலப் பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி என்ற முகம்மது தௌபிக், அக்பர்ஷா பீர் முகம்மது, கார்த்திக் என்ற அலிஷேக்(32) ஆகியோர், மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி, நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!