News March 23, 2024

கன்னியாகுமரியில் ‘செல்பி’ பாயிண்ட்

image

100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ‘செல்பி’ பாயிண்ட் நேற்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் நின்று பொதுமக்கள் மற்றும்
சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ‘செல்பி’ எடுத்து செல்கிறார்கள்.

Similar News

News November 2, 2025

குமரி: தனியார் பாரில் அதிரடி சோதனை

image

நித்திரவிளை போலீசாருக்கு நேற்று கல்லு விளையில் உள்ள பார் ஒன்றில் மது விற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக 44 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக முத்துக்குமார், சிமியோன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News November 2, 2025

குமரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News November 2, 2025

குமரி: கேரளா விரைந்தது தனிப்படை

image

பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான கிருஷ்ணதாஸ் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரமேஷ் மற்றும் விமல் ஆகியோர் மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். மேலும் கொலை தொடர்பாக கிருஷ்ணதாஸ் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!