News December 9, 2024
சிங்கப்பூரில் சாதனை படைத்த சிவகங்கை மாணவர்

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே பெருங்குடி மணிவண்ணன் மகன் ரக்சித் நெவீன் (16)சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் புக் ஆப் ரெக்கார்டு’ நிகழ்ச்சியில் பங்கேற்று கண்களை கட்டிக்கொண்டு 18 மீட்டர் துாரமுள்ள இலக்கில் அம்பை எய்து சாதனை படைத்து, சிங்கப்பூர் விருதையும் பெற்றுள்ளார்.அதே 18 மீட்டர் துார இலக்கை கண்களை மூடி வில்லில் இருந்து அம்பை எய்து சாதனை படைத்துள்ளார்.
Similar News
News August 9, 2025
சிவகங்கை: பேரூராட்சி செயல் அலுவலர்களின் எண்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்களின் எண்கள்
▶️கானாடுகாத்தான் – 04565-283583
▶️நாட்டரசன்கோட்டை – 04575-234300
▶️இளையான்குடி – 04564-265246
▶️திருப்புவனம் – 04574-265391
▶️மானாமதுரை – 04574-268237
▶️நெற்குப்பை – 04577-245411
▶️சிங்கம்புணரி – 04577-242939
▶️திருப்பத்தூர் – 04577-266295
▶️பள்ளத்தூர் – 04565-283683
▶️கண்டனூர் – 04565-282044
News August 9, 2025
சிவகங்கை: மன அமைதி பெற இங்க போங்க.!

சிவகங்கை நகரசூரக்குடியில் அமைந்துள்ளது தேசிகநாதர் கோயில். இங்குள்ள பைரவர் சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு. ஒரு யாகத்தில் சூரியன் பங்கேற்று, சிவனை அழைக்காததால் ஆத்திரமடைந்த சிவன், சூரியனை தண்டித்தார்.பின்னர் சிவன் கருணை கொண்டு சாப விமோசனம் தந்தார்.இதனடிப்படையில் அங்கு கோயில் எழுப்பப்பட்டது. குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, மன அமைதி பெற இங்கு வழிபட்டால் நடக்கும் என்பது ஐதீகம்.
News August 9, 2025
ஆங்கிலேயர் கால கல்வெட்டு கண்டடுப்பு

ஆங்கிலேய ஆட்சியின் போது இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தையும், புதுக்கோட்டை அரசையும் பிரிக்கும் எல்லைக்கல் ஒன்று சிவகங்கை நெற்குப்பைக்கும் புதுக்கோட்டை வேந்தன்பட்டிக்கும் நடுவே உள்ள பள்ளத்துப்பட்டி விலக்கு அருகே புதர் மண்டிய இடத்தில் காணப்பட்டது. காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரன் ஆய்வு செய்தனர்.