News December 8, 2024

ஆட்சியை கவிழ்த்த சிறுவனின் வார்த்தைகள்

image

சிரியாவில் நடந்துள்ள ஆட்சி மாற்றத்துக்கு, Mouawiya Syasneh என்ற 14 வயது சிறுவனின் கோபம் தான் காரணம் தெரியுமா? ஆம், அரசின் அடக்குமுறையை கண்டித்து 2011-ல் டாரா நகரச் சுவரில், ‘அடுத்து உன் முறை தான், டாக்டர்’ என அதிபர் ஆசாத்தை குறித்து எழுதினான். அவனும் நண்பர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதுவே ஆட்சிக்கு எதிரான தீப்பொறியை கிளப்ப, அடுத்த 14 ஆண்டுகள் உள்நாட்டுப் போர் தான். இன்று ஆட்சிக் கவிழ்ந்தது.

Similar News

News September 13, 2025

மீண்டும் வருமா அந்த மகிழ்ச்சி!

image

மனிதரின் கிரியேட்டிவிட்டியால் தோன்றுவது தான் டெக்னாலஜி. ஆனால், அது இன்று நம் வாழ்க்கை முறையையே புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், நாம் இழந்துவிட்ட திறன்களும் ஏராளம். குறிப்பாக, டெக்னாலஜி அவ்வளவாக ஊடுருவாத நம் குழந்தைப் பருவம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது நினைவிருக்கிறதா.. எப்போதாவது அந்த அனுபவங்களை நினைத்துப் பார்க்கிறீர்களா?

News September 13, 2025

தமன்னா எதிர்பார்க்கும் அந்த அதிர்ஷ்டசாலி யாரோ?

image

விஜய் வர்மா உடனான பிரேக்கப்பிற்கு பிறகு, தமன்னா தனது எதிர்கால வாழ்க்கை துணை குறித்து பகிர்ந்துள்ளார். முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் தான், நான் அவர்களின் வாழ்க்கைக்கு வந்ததாக கருத வேண்டும், அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி எனக்கு வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும், அந்த அதிர்ஷ்டசாலியை பார்க்க ஆவலாக இருப்பதாகவும், அது விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

டாலர் சிட்டியில் தொழில் பாதிப்பு: EPS

image

டிரம்ப் வரி விதிப்பால் டாலர் சிட்டியான திருப்பூரில் 50% தொழில்கள் முடங்கிவிட்டதாக EPS தெரிவித்துள்ளார். தொழில் அதிபர்களை ஸ்டாலின் சந்திக்காதது தவறு என தெரிவித்த அவர், பாதிப்புகளை PM மோடியிடம் CM எடுத்து கூறி இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் முன் உள்ளூர் தொழிலை பாதுகாக்க வேண்டும் எனவும் திமுக அரசை EPS வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!