News December 8, 2024
இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: அன்புமணி

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது, இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2024-ல் மட்டும் 569 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக மீட்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News August 26, 2025
காலை 11 மணிக்கு மேல் வெளியே வராதீங்க.. அலர்ட்

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையிலும், காலை 10 மணிக்கே வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வெளியே செல்ல மக்கள் தயங்குகின்றனர். குறிப்பாக, இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் IMD எச்சரித்துள்ளது. எனவே, முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.
News August 26, 2025
RECIPE: சத்துள்ள குதிரைவாலி தக்காளி தோசை!

◆குதிரைவாலி ரத்த சோகையை தடுப்பது மட்டுமின்றி, சர்க்கரை நோயாளிகளுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.
➥குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை கலந்து, 3 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து கொள்ளவும். இதனை 8 மணி நேரத்திற்கு புளிக்க வைக்கவும்.
➥தக்காளி, சீரகம், இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைத்து, புளிக்க வைத்த மாவுடன் சேர்க்கவும்.
➥இந்த மாவை தோசையாக்கி சாப்பிட்டால், உடலுக்கு நார்ச்சத்து கிடைக்கும்.
News August 26, 2025
வாலாட்டி.. அன்பின் வழிகாட்டி! இன்று சர்வதேச நாய்கள் தினம்!

நாயை வளர்த்து அதன் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 2004-ம் ஆண்டு முதல் சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உற்ற நண்பனாக இருப்பது இந்த நாலு கால் ஜீவன்தான். தனிமையில் வாடுபவர்களுக்கு இவர்கள் ஒரு நல்ல கம்பேனியன். தற்போது நாய்கள் குறித்த சர்ச்சைகள் இருப்பினும், அவை முற்றிலும் வெறுக்கப்பட வேண்டிய ஜீவன்கள் அல்லவே!