News December 8, 2024
இவர்களை நாடு மன்னிக்காது: பிரேமலதா

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை நாடு மன்னிக்காது என பிரேமலதா கூறியுள்ளார். மாணவியை வன்கொடுமை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், பாலியல் வன்கொடுமைகள் நடக்காமல் பார்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் மனநலம் பாதித்த பெண்ணை 7 பேர் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியானது.
Similar News
News August 26, 2025
காலை 11 மணிக்கு மேல் வெளியே வராதீங்க.. அலர்ட்

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையிலும், காலை 10 மணிக்கே வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வெளியே செல்ல மக்கள் தயங்குகின்றனர். குறிப்பாக, இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் IMD எச்சரித்துள்ளது. எனவே, முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.
News August 26, 2025
RECIPE: சத்துள்ள குதிரைவாலி தக்காளி தோசை!

◆குதிரைவாலி ரத்த சோகையை தடுப்பது மட்டுமின்றி, சர்க்கரை நோயாளிகளுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.
➥குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை கலந்து, 3 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து கொள்ளவும். இதனை 8 மணி நேரத்திற்கு புளிக்க வைக்கவும்.
➥தக்காளி, சீரகம், இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைத்து, புளிக்க வைத்த மாவுடன் சேர்க்கவும்.
➥இந்த மாவை தோசையாக்கி சாப்பிட்டால், உடலுக்கு நார்ச்சத்து கிடைக்கும்.
News August 26, 2025
வாலாட்டி.. அன்பின் வழிகாட்டி! இன்று சர்வதேச நாய்கள் தினம்!

நாயை வளர்த்து அதன் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 2004-ம் ஆண்டு முதல் சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உற்ற நண்பனாக இருப்பது இந்த நாலு கால் ஜீவன்தான். தனிமையில் வாடுபவர்களுக்கு இவர்கள் ஒரு நல்ல கம்பேனியன். தற்போது நாய்கள் குறித்த சர்ச்சைகள் இருப்பினும், அவை முற்றிலும் வெறுக்கப்பட வேண்டிய ஜீவன்கள் அல்லவே!