News December 8, 2024
ஆந்திர விபத்தில் 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் அதிகாலை நடைபெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அட்டங்கியில் இருந்து நார்கட்பள்ளிக்கு சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், நான்கு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 24, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 642 ▶குறள்: ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. ▶பொருள்: ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.
News March 24, 2026
இந்தியா சவால்களுக்கு அஞ்சாது: PM மோடி

இந்தியா சவால்களுக்கு அஞ்சாமல் அவற்றை எதிர்கொள்ளும் என்று PM மோடி கூறியுள்ளார். போரின் தாக்கம் உலகின் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளதாகவும், போர் சூழல்களை நாம் கையாளும் விதத்தையே உலக நாடுகள் பின்பற்றுவதாகவும் தெரிவித்தார். எப்போதும் அமைதி பேச்சுவார்த்தைகளை வரவேற்கும் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் இந்தியா நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
News March 24, 2026
நெருக்கடி.. கடந்த கால சிரமங்கள் மீண்டும் ஏற்படுமா?

போர் நெருக்கடியை கோவிட் போல எதிர்கொள்ள வேண்டும் என்ற PM மோடியின் கருத்து கவலையளிக்கிறது. இதனால், மீண்டும் கடினமான காலங்கள் ஏற்படுமா என்ற கேள்வி மக்களை வாட்டி வதைக்கிறது. போர் நீடித்து, வரும் நாட்களில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டால் என்னவாகும்? இறக்குமதி & ஏற்றுமதி தடைப்பட்டால் என்னவாகும்? இந்த தாக்கம் விலைவாசி, வேலைவாய்ப்புகளையும் பாதித்தால் நிலைமை என்னவாகும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


