News March 23, 2024

ரத்த சோகையை போக்க இப்படி சாப்பிடுங்க!

image

ரத்த சோகை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் இரும்புச் சத்து பற்றாக்குறையால் ரத்த சோகை உண்டாகிறது. கீரைகள், பேரிச்சம் பழம், பால், இறைச்சி போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. கீரைகள், மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணும்போது அவற்றுடன் எலுமிச்சை, நெல்லி போன்ற வைட்டமின் – சி போன்ற உணவுகளை உட்கொண்டால், நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து உடலால் அதிகம் உறிஞ்சப்படும்.

Similar News

News October 24, 2025

சிந்திக்க தூண்டும் PHOTOS

image

சில படங்கள் நம் மனதில் தங்கி, இந்த உலகைப் பார்க்கும் விதத்தையே மாற்றுகின்றன. இவை யதார்த்தங்கள் மற்றும் ஞானத்தை பிரதிபலிக்கின்றன. ஒருசில விஷயங்களை, வித்தியாசமாகப் பார்ப்பதன் மூலம் தெளிவு கிடைக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. சிந்திக்க தூண்டும் சில போட்டோக்களை, மேலோ பகிர்ந்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. பிடித்திருந்தா நண்பர்களுக்கு share பண்ணுங்க.

News October 24, 2025

NATIONAL ROUNDUP: டெல்லியில் செயற்கை மழை

image

*தெலுங்கானா இடைத்தேர்தலில் 130 பேரின் மனு தள்ளுபடி *இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக மணீஷ் சர்மா நியமனம் *காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் அக்.29 செயற்கை மழை பொழிய வைக்க திட்டம் *கல்வியின் மூலம் கேரளா வளர்ச்சியடைவதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு *டெல்லியை தொடர்ந்து ஹரியானா பஞ்சாப்பில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததாக தகவல்

News October 24, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 498
▶குறள்:
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
▶பொருள்:சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.

error: Content is protected !!