News December 8, 2024
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் சிறை பிடித்தது. ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்குவந்த இலங்கை கடற்படை, மீனவர்களை படகுகளுடன் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News September 12, 2025
செல்போன் ரீசார்ஜ் 1 ஆண்டுக்கு இலவசம்? CLARITY

‘Narendra Modi Free Recharge Scheme’ திட்டத்தில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், BSNL என அனைத்து செல்போன் நெட்வொர்க்கிலும் ஓராண்டுக்கு இலவச ரீசார்ஜ் செய்யலாம் என தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம்(PIB FACTCHECK) விளக்கம் அளித்துள்ளது. இது வெறும் வதந்தி என்றும், மத்திய அரசின் திட்டங்களை myscheme.gov.in. இணையதளத்தில் செக் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
News September 12, 2025
வெற்று விளம்பரங்களால் ஏமாற்றும் திமுக: விஜய் காட்டம்

மக்களை சந்திக்கும் பயணத்தில் எந்த அரசியல் தலைவருக்கும் விதிக்கப்படாத நிபந்தனைகள் தனக்கு விதிக்கப்பட்டுள்ளதாக விஜய் குற்றம்சாட்டினார். தனது பயணத்தில் தனது தொண்டர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பை CM ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். வெற்று விளம்பரங்கள் மூலம் திமுக மக்களை ஏமாற்றுவதாக சாடிய விஜய், நாளை திருச்சியில் தனது எழுச்சி பயணம் தொடங்குவதாகவும் அறிக்கையில் தெரிவித்தார்.
News September 12, 2025
கொலுசு அணிவதன் நன்மைகள்

☆வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகமாகும். இதனால் ஆயுள் விருத்தியாகும் என்கிறது ஆயுர்வேதம். ☆கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடுகிறது. ☆குதிகால் நரம்பை தொட்டுக் கொண்டிருப்பதால் மூளைக்கு செல்லும் உணர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. ☆இதனால் கோபம் & உணர்ச்சி வசப்படுதல் கட்டுப்படும். SHARE IT