News December 8, 2024

நாட்டை விட்டு சிரியா அதிபர் தப்பி ஓட்டம்?

image

சிரியாவில் உள்ள முக்கிய பகுதிகளை கைப்பற்றிய துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் படை, தலைநகர் டமாஸ்கசை நோக்கி முன்னேறி வருகிறது. இதனால் கிளர்ச்சியாளர்கள் கையில் சிக்கிவிடக் கூடாது என சிரியா அதிபர் ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தத் தகவலை சிரியா அரசுத் தொலைக்காட்சி மறுத்துள்ளது. சிரியாவில்தான் ஆசாத் இன்னும் இருக்கிறார் என அது செய்தி வெளியிட்டுள்ளது.

Similar News

News March 16, 2026

NDA-தவெக கூட்டணி? காத்திருக்கும் பாஜக

image

NDA-தவெக இடையே பேச்சுவார்த்தை நடக்கவில்லை என இருதரப்புமே அதிகாரப்பூர்வமாக மறுத்துவிட்டனர். ஆனாலும், கூட்டணிக்கு விஜய் வந்தால் வெற்றி உறுதி என கருதும் பாஜக, தொடர் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மார்ச் 30-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குவதால், அதற்குள் எப்படியாவது விஜய்யை தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என பாஜக காய் நகர்த்துகிறதாம்.

News March 16, 2026

கடன் தள்ளுபடி.. அரசு வெளியிட்ட தகவல்

image

கடந்த 11 ஆண்டுகளில் ₹9.75 கோடி வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அதிகபட்சமாக 2020 நிதியாண்டில் ₹1.59 லட்சம் கோடியும், குறைந்தபட்சமாக 2025 நிதியாண்டில் ₹47,568 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டது என்றார். 2025 நிதியாண்டு முதல் வாராக்கடன் தள்ளுபடி தொகை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News March 16, 2026

பெண்ணை கடித்து குதறிய நாய்கள்.. போலீசார் அதிர்ச்சி

image

புனேவில் பெண் ஒருவர் இறப்பு தொடர்பாக வெளியான CCTV போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டபோது, முதலில் கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனால் CCTV-ல் பதிவாகியிருந்த காட்சிகள் அவர்களை. அதிகாலையில் நடந்துசென்ற பெண்ணை சூழ்ந்த நாய்கள் சரமாரியாக கடித்து குதறியதும், அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!