News December 8, 2024
கட்டுமான இடத்தில் தேங்கி இருந்த மழை நீரில் மூழ்கி சிறுவன் பலி

பீகார் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் தாஸ், இவர் குடும்பத்துடன் ஶ்ரீபெரும்புதூர் அருகே பாலநல்லூர் கிராமத்தில் தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இவரது மகன் அஸ்வின் குமார் (6) கட்டுமான பணி நடக்கும் இடத்தில் உள்ள, பள்ளத்தில் தேங்கி இருந்த மழை நீரில் மூழ்கி இன்று இறந்து கிடந்தார். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
காஞ்சிபுரத்தில் சர்க்கரை நோயா..? இலவச சிகிச்சை!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம்.இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
வாலாஜாபாத் கணேசன் தீவிர பிரச்சாரம்!

காஞ்சிபுரம் மாநகராட்சி மேற்குப் பகுதி 11ஆவது வட்டம் சார்பில் நேற்று(மார்ச் 2) நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பி. கணேசன் கலந்து கொண்டார். திமுக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து, வரவிருக்கும் தேர்தலில் மாற்றத்திற்காக மக்கள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார். இதில், திரளான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
News March 3, 2026
காஞ்சிபுரம் கால்வாயில் ஆண் சடலம்!

மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் உள்ள அடையாறு கால்வாயில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


